sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 9 வயது சிறுமிக்கு தொல்லை இருவர் மீது வழக்கு பதிவு

/

 9 வயது சிறுமிக்கு தொல்லை இருவர் மீது வழக்கு பதிவு

 9 வயது சிறுமிக்கு தொல்லை இருவர் மீது வழக்கு பதிவு

 9 வயது சிறுமிக்கு தொல்லை இருவர் மீது வழக்கு பதிவு


ADDED : ஜன 07, 2026 06:43 AM

Google News

ADDED : ஜன 07, 2026 06:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி: வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த ஒன்பது வயது சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த இருவர், பலாத்காரம் செய்ய முயன்றது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருத்தணி காவல் மாவட்ட எல்லைக்குட்பட்ட ஒன்பது வயது சிறுமி, நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன், 51, நெல்சன், 23, இருவரும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினரை கண்டதும், இருவரும் தப்பியோடினர். நேற்று பாதிக்கப்பட்ட சிறுமி, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், திருத்தணி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இருவரையும் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us