sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மின் கசிவால் தீ விபத்து 3 குடிசைகள் எரிந்து நாசம்

/

மின் கசிவால் தீ விபத்து 3 குடிசைகள் எரிந்து நாசம்

மின் கசிவால் தீ விபத்து 3 குடிசைகள் எரிந்து நாசம்

மின் கசிவால் தீ விபத்து 3 குடிசைகள் எரிந்து நாசம்


ADDED : அக் 04, 2024 11:57 PM

Google News

ADDED : அக் 04, 2024 11:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த புட்லுார் ராமாபுரம் பகுதியில் உள்ள ராம் நகரில், ஹிந்து மராட்டி சமூகத்தைச் சேர்ந்த 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் குடுகுடுப்பை தொழில் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், மூன்று மாதங்களாக பூட்டிக் கிடந்த ராஜா, 34, என்பவரது வீட்டில், நேற்று மாலை 3:30 மணியளவில் திடீரென தீப்பிடித்தது.

இதில், தீ மளமளவென பரவி அருகில் உள்ள ராதாரவி, 34, சந்திரசேகரன், 34, ஆகியோர் குடிசை வீடுகளிலும் தீ பரவி எரிந்து நாசமாகின.

தகவறிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார் அளித்த தகவலின்படி, திருவள்ளூர் தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை எனவும், 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாகின எனவும் போலீசார் தெரிவித்தனர். திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us