/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காய்கறி வேன் அரசு பஸ் மோதல் 40 பயணியர் தப்பினர்
/
காய்கறி வேன் அரசு பஸ் மோதல் 40 பயணியர் தப்பினர்
ADDED : நவ 18, 2025 03:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி: திருத்தணி அருகே, காய்கறி வேன் மீது எதிரே வந்த அரசு பேருந்து மோதியதில், அதிர்ஷ்டவசமாக 40 பயணியர் காயமின்றி தப்பினர்.
திருவள்ளூர் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து, தடம் எண்:97 பேருந்து, நேற்று அதிகாலையில் திருத்தணி சென்றது. பேருந்தை பூபாலன், ஓட்டினார். சுந்தரம், 52 நடத்துநராக பணிபுரிந்தார்.
காலை, 6:30 மணிக்கு சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருத்தணி அருகே பட்டாபிராமபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது எதிரே வந்த காய்கறி வேன் மீது மோதியது.
இதில் அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணம் செய்த, 40 பயணியர் தப்பினர்.

