/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மக்கள் குறைதீர் கூட்டம் 402 மனுக்கள் ஏற்பு
/
மக்கள் குறைதீர் கூட்டம் 402 மனுக்கள் ஏற்பு
ADDED : பிப் 11, 2025 12:27 AM

திருவள்ளூர்திருவள்ளூரில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், 402 மனுக்கள் ஏற்கப்பட்டன.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நேற்று, மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் பிரதாப் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பொதுமக்கள் மனு அளித்தனர்.
இதில், நிலம் சம்பந்தமாக 120, சமூக பாதுகாப்பு திட்டம் 52, வேலைவாய்ப்பு வேண்டி 80, பசுமை வீடு, அடிப்படை வசதி கோரி 59, இதர துறை 91 என, மொத்தம், 402 மனுக்கள் பெறப்பட்டன.
இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். 'தாட்கோ' வாயிலாக, தமிழ்நாடு துாய்மை பணி நல வாரியத்தின் ஒன்பது உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, 12,500 ரூபாய் வழங்கப்பட்டது.
கூட்டத்தில், பொன்னேரி சப் - கலெக்டர் வாகே சங்கத் பல்வந்த், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வெங்கட்ராமன், சத்தியபிரசாத் உட்பட பலர் பங்கேற்றனர்.