sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஏரியில் மீன் பிடிக்க சென்ற 4ம் வகுப்பு மாணவி பலி

/

ஏரியில் மீன் பிடிக்க சென்ற 4ம் வகுப்பு மாணவி பலி

ஏரியில் மீன் பிடிக்க சென்ற 4ம் வகுப்பு மாணவி பலி

ஏரியில் மீன் பிடிக்க சென்ற 4ம் வகுப்பு மாணவி பலி


ADDED : ஆக 01, 2025 10:20 PM

Google News

ADDED : ஆக 01, 2025 10:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேப்பம்பட்டு:வேப்பம்பட்டு ஏரியில் மீன்பிடிக்க சென்ற நான்காம் வகுப்பு மாணவி தண்ணீரில் மூழ்கி பலியானார்.

திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு, சுந்தர்பாபு நகரைச் சேர்ந்தவர் ஜெர்மின் சுந்தர் மகள் ஜெர்மின் எமல்டா, 9.

இவர், நேற்று முன்தினம் மாலை 6:30 மணியளவில், வீட்டருகே வசிக்கும் நான்கு பேருடன் வேப்பம்பட்டு ஏரியில் மீன்பிடிக்க சென்றார். அப்போது, ஜெர்மின் எமல்டாவும், ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுவனும் ஏரியில் தவறி விழுந்தனர்.

ஏரி அருகே விளையாடிக் கொண்டிருந்த வாலிபர்கள், இருவரையும் மீட்டு, பெருமாள்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஜெர்மின் எமல்டா, ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிறுவன் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின்படி, செவ்வாப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us