/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொழுதாவூர் ரயில்வே கேட் மூடல் 5 கி.மீ., சுற்றிச் செல்லும் அவலம் 300 ஏக்கர் விவசாயம் பாதிக்கும் அபாயம்
/
தொழுதாவூர் ரயில்வே கேட் மூடல் 5 கி.மீ., சுற்றிச் செல்லும் அவலம் 300 ஏக்கர் விவசாயம் பாதிக்கும் அபாயம்
தொழுதாவூர் ரயில்வே கேட் மூடல் 5 கி.மீ., சுற்றிச் செல்லும் அவலம் 300 ஏக்கர் விவசாயம் பாதிக்கும் அபாயம்
தொழுதாவூர் ரயில்வே கேட் மூடல் 5 கி.மீ., சுற்றிச் செல்லும் அவலம் 300 ஏக்கர் விவசாயம் பாதிக்கும் அபாயம்
ADDED : செப் 19, 2024 01:36 AM

திருவாலங்காடு:சென்னை --- அரக்கோணம் ரயில் மார்க்கத்தில், திருவள்ளூர் அடுத்து அமைந்துள்ளது, திருவாலங்காடு ரயில் நிலையம். இந்த ரயில் நிலையம் வழியாக, தினமும் 400க்கும் மேற்பட்ட புறநகர், எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில்கள் சென்று வருகின்றன. இதன் அருகே தொழுதாவூர் கிராமம் உள்ளது.
இந்த ரயில் தண்டவாளத்தை கடந்து தான், இப்பகுதி விவசாயிகள் விவசாய நிலங்கள் மற்றும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று வந்தனர்.
மேலும், ஓரத்தூர், பேரம்பாக்கம், தக்கோலம் பகுதிகளுக்கும் சென்று வந்தனர். இந்நிலையில், பாதுகாப்பாக தண்டவாளத்தை கடப்பதற்காக கேட் அமைக்கப்பட்டது.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்த ரயில்வே கேட் இரண்டு மாதத்திற்கு முன் ரயில்வே நிர்வாகத்தால் மூடப்பட்டது.
மேலும், தண்டவாளத்தை கடக்க வசதியாக சுரங்கப்பாதை அமைக்க திட்டமிட்டுள்ளது. ஆனால், தற்போது சுரங்கப்பாதை அமைப்பதற்கான பணி நடைப்பெறவில்லை.
இந்நிலையில், கேட் மூடப்பட்டதால், தண்டவாளத்தை கடந்து சென்று, 300க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களில் நெல் பயிர் செய்யும் தொழுதாவூர் விவசாயிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து தொழுதாவூர் விவசாயிகள் கூறியதாவது:
நவரை, பின் சம்பா பருவத்தில் பயிர் செய்ய விவசாயிகள் தயாராகும் நிலையில், ரயில்வே கேட் மூடப்பட்டுள்ளதால் டிராக்டர், மாட்டுவண்டியில் உரம் ஏற்றி வருவோர், மணவூர் அல்லது திருவாலங்காடு கேட் வழியாக, 5 கி.மீ., சுற்றிச்செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
விவசாயத்தை நம்பியுள்ள 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வறுமையில் வாடும் அபாயம் உள்ளது. இதேநிலை தொடர்ந்தால், விவசாயத்தை கைவிடுவது மட்டுமே தீர்வாக இருக்கும்.
மேலும், 200க்கும் மேற்பட்ட கால்நடைகள் தினமும் தண்டவாளத்தை கடந்து மேய்ச்சலுக்கு செல்கின்றன. மூடிய ரயில்வே கேட்டால் அவை விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயமும் உள்ளது.
எனவே, ரயில்வே துறை உயரதிகாரிகள் ஆய்வு செய்து, மீண்டும் கேட்டை பயன்பாட்டுக்கு திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.