/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கூவம் ஊராட்சியில் 668 மனுக்கள் ஏற்பு
/
கூவம் ஊராட்சியில் 668 மனுக்கள் ஏற்பு
ADDED : ஆக 20, 2025 10:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் கூவம் ஊராட்சியில், நேற்று நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாமில், 286 மகளிர் உரிமைத்தொகை மனுக்கள் உட்பட 668 மனுக்கள் ஏற்கப்பட்டன.
கடம்பத்துார் ஒன்றியம், கூவம் ஊராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் நடந்தது. கடம்பத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையில் நடந்த முகாமில், சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜேந்திரன் பங்கேற்று மனுக்களை பெற்றார்.
இந்த முகாமில், 286 மகளிர் உரிமைத்தொகை மனுக்கள் உட்பட, மொத்தம் 668 மனுக்கள் பெறப்பட்டன.

