/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
எண்ணுாரில் 7வது நாளாக போராட்டம்
/
எண்ணுாரில் 7வது நாளாக போராட்டம்
ADDED : ஜன 02, 2024 11:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எண்ணுார்:எண்ணுார் பெரிய குப்பத்தில் கோரமண்டல் உரத் தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலைக்கு வரும் குழாயில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு பெரியகுப்பம், சின்னகுப்பம், எர்ணாவூர் குப்பம் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு, கண் எரிச்சல், வாந்தி, மயக்கம், மூச்சு திணறல் ஏற்பட்டது.
இதனால் உரத் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என 10க்கும் மேற்பட்ட கிராம மீனவர்கள், மீன்பிடிக்க செல்லாமல் தொழிற்சாலை வாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏழாவது நாளாக நேற்றும், அவர்கள் போராட்டம் நடத்தினர்.