sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

80 மதுபாட்டில்கள் பறிமுதல் பெண் உட்பட இருவர் கைது

/

80 மதுபாட்டில்கள் பறிமுதல் பெண் உட்பட இருவர் கைது

80 மதுபாட்டில்கள் பறிமுதல் பெண் உட்பட இருவர் கைது

80 மதுபாட்டில்கள் பறிமுதல் பெண் உட்பட இருவர் கைது


ADDED : அக் 03, 2024 08:11 PM

Google News

ADDED : அக் 03, 2024 08:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி:காந்தி ஜெயந்தி தினமான நேற்று முன்தினம், தமிழகம் முழுதும் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தது. அதே சமயம் கள்ளச்சந்தையில் பல்வேறு பகுதிகளில் மது விற்பனை நடைபெற்றது.

மது விற்பனையை தடுக்கும் வகையில், பொன்னேரி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். பொன்னேரி அடுத்த கோளூர் கிராமத்தில், பெண் ஒருவர் மது விற்பனையில் ஈடுபடுவதாக வந்த தகவரின்படி, பெண் போலீசாருடன் அங்கு சென்றனர்.

சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்ட அதே கிராமத்தைச் சேர்ந்த தென்றல் சாந்தி, 32, என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து, 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அதேபோல், கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் மேற்கொண்ட சோதானையில், சாணார்பாளையம் கிராமத்தில் மதுவிற்பனையில் ஈடுபட்ட சந்திரன், 50, என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து, 30 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு, 12,000 ரூபாய்.






      Dinamalar
      Follow us