/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் 80,550 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி
/
திருத்தணியில் 80,550 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி
திருத்தணியில் 80,550 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி
திருத்தணியில் 80,550 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி
ADDED : ஜன 08, 2025 07:59 PM
திருத்தணி:திருத்தணி கோட்டத்தில் உள்ள திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு மற்றும் திருவாலங்காடு ஆகிய நான்கு ஒன்றியங்களில், விவசாயிகள் வளர்க்கும் பசு மற்றும் எருமை மாடுகளை தாக்கும், கால் மற்றும் வாய் நோயை தடுக்க, கோமாரி தடுப்பூசி போடப்படுகிறது. ஆண்டுதோறும் இரு முறை தடுப்பூசி போடப்படுகிறது.
அந்த வகையில், மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி போடும் பணி, கடந்த 3ம் தேதி, திருத்தணி கோட்டத்தில் துவங்கப்பட்டது.
திருத்தணி நகராட்சி குமாரகுப்பம், கீழ்முருக்கம்பட்டு காலனி, மத்துார் குமாரகுண்டா ஆகிய பகுதிகளில் கோமாரி தடுப்பூசி போடும் பணிகளை, திருத்தணி கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் எஸ்.தாமோதரன் துவக்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
திருத்தணி கோட்டத்தில், 78,908 பசுக்கள், 1,642 எருமைகள் என, மொத்தம், 80,550 மாடுகளுக்கு தடுப்பூசியை, இம்மாதம், 24ம் தேதி வரை, மொத்தம், 23 மருத்துக்குழுவினர் கிராமங்களுக்கு நேரிடையாக சென்று போடுவர்.
இப்பணியில், உதவி மருத்துவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் உதவியாளர்கள் ஈடுபடுவர். கன்றுகள் இறப்பு, பால் உற்பத்தி குறைவது போன்றவையால் விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.
இதை தடுப்பதற்கு, விவசாயிகள் அனைவரும் தவறாமல் மாடுகளுக்கு நோய் தடுப்பூசி போட வேண்டும். தடுப்பூசி போடுவதற்கு முன், சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு, ஊராட்சி தலைவர், செயலர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் வாயிலாக தகவல் தெரிவிக்கப்படும்.
கடந்த ஆறு நாட்களில், 18,000 கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

