sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பழுதான வேளாண்மை கிடங்கு கட்டடம் மழையில் நனைந்து வீணாகும் உர மூட்டை

/

பழுதான வேளாண்மை கிடங்கு கட்டடம் மழையில் நனைந்து வீணாகும் உர மூட்டை

பழுதான வேளாண்மை கிடங்கு கட்டடம் மழையில் நனைந்து வீணாகும் உர மூட்டை

பழுதான வேளாண்மை கிடங்கு கட்டடம் மழையில் நனைந்து வீணாகும் உர மூட்டை


ADDED : செப் 25, 2024 12:41 AM

Google News

ADDED : செப் 25, 2024 12:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி ஒன்றிய அலுவலகம் பின்புறத்தில், வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகம் மூலம் ஒன்றிய விவசாயிகளுக்கு விதை நெல், வேர்கடலை, பயிறு வகை மற்றும் உரங்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.

இதற்காக விதைகள் இருப்பு வைப்பதற்கு ஒரு கட்டடமும், உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் இருப்பு வைப்பதற்கு மற்றொரு கட்டடம் என இரண்டு கட்டடங்கள் உள்ளன. இந்த கட்டடங்களை முறையாக பராமரிக்காததால் தற்போது கட்டடத்தின் மேல்தளம் சேதம் அடைந்துள்ளது.

இதனால் மழை பெய்யும் போது மழைநீர் ஒழுகி கிடங்கு முழுதும் தண்ணீர் தேங்கி நிற்பதுடன், உயிர் மற்றும் விதைநெல் மழையில் நனைந்து வீணாகிறது. இது தவிர கட்டடத்தில் செடிகள் வளர்ந்தும் விரிசலும் அடைந்துள்ளது.

எனவே பழுதடைந்த வேளாண்மை கிடங்கு கட்டடங்களை சீரமைக்க வேண்டும் அல்லது அகற்றி அதே இடத்தில் புதிய கட்டடம் கட்டித் தரவேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us