sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

உவர்ப்பு மண்ணில் அலையாத்தி காடுகள் உருவாக்கம் புது முயற்சி! 500 ஏக்கரில் 3.50 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டம்

/

உவர்ப்பு மண்ணில் அலையாத்தி காடுகள் உருவாக்கம் புது முயற்சி! 500 ஏக்கரில் 3.50 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டம்

உவர்ப்பு மண்ணில் அலையாத்தி காடுகள் உருவாக்கம் புது முயற்சி! 500 ஏக்கரில் 3.50 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டம்

உவர்ப்பு மண்ணில் அலையாத்தி காடுகள் உருவாக்கம் புது முயற்சி! 500 ஏக்கரில் 3.50 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டம்


UPDATED : ஜன 17, 2024 07:45 AM

ADDED : ஜன 16, 2024 11:47 PM

Google News

UPDATED : ஜன 17, 2024 07:45 AM ADDED : ஜன 16, 2024 11:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளி, புழுதிவாக்கம் பகுதிகளில், பல்வேறு தொழில் நிறுவனங்களின் வருகையால், அங்குள்ள அலையாத்தி காடுகள் பாதிப்படைந்தன.

'மிஷ்டி' திட்டம்


வளர்ச்சி திட்டங்களுக்காக புதிய தொழில் நிறுவனங்களின் வருகையை தவிர்க்க முடியாத சூழலில், அலையாத்தி மற்றும் பிற காடுகளை அதிகளவில் உருவாக்க மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல் திட்டம் உருவாக்கி உள்ளது.கரையோர வாழ்விடங்கள் மற்றும் உறுதியான வருமானங்களுக்கான சதுப்பு நில முன்னெடுப்பு எனப்படும் 'மிஷ்டி' திட்டத்தின் கீழ் இது உருவாகிறது.

இந்த திட்டத்தின் நோக்கமானது, கடற்கரை ஓரங்களில் சதுப்பு நில காடுகளை அதிகளவில் உருவாக்குவது மற்றும் அவற்றை பாதுகாப்பதாகும்.

10 வகை மரக்கன்றுகள்


அதன்படி, தற்போது காட்டுப்பள்ளி, புழுதிவாக்கம் கிராமங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதம், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து, காட்டுப்பள்ளி, புழுதிவாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள பகிங்ஹாம் கால்வாயின் இருபுறமும் உள்ள கரைகள் பொக்லைன் இயந்திரங்களை கொண்டு சமன் செய்யப்பட்டன.அதிலிருந்த முட்செடிகள் முற்றிலும் அகற்றப்பட்டன.

தற்போது, பகிங்ஹாம் கால்வாயின் ஓரங்களில் அலையாத்தி செடிகளும், அதற்கு அடுத்துள்ள சதுப்பு நிலப்பகுதிகளில், உவர்ப்பு மண்ணில் வளரக்கூடிய புன்னை, பூவரசு, அத்தி, ஆலம், அரசு என, 10 வகையான மரக்கன்றுகள் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன.

மரக்கன்றுகளுக்கு தேவையான தண்ணீர் டிராக்டர்களில் இருந்து கொண்டு வரப்பட்டு பாய்ச்சப்படுகிறது.

மேலும், மழைநீரை சேமித்து, பயன்படுத்துவதற்காக ஆங்காங்கே கிணறுகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.

இப்பகுதியில், 500 ஏக்கர் பரப்பில், 3.50 லட்சம் மரக்கன்றுகள் வைத்து பராமரிக்க வனத்துறை திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

ஜே.சி.பி., இயந்திரங்கள் உதவியுடன் பள்ளங்கள் தோண்டுவது, அதில் செடிகளை பதிப்பது, தினமும் அவற்றிற்கு வெளியில் இருந்து டிராக்டர்களில் தண்ணீர் கொண்டு வந்து பாய்ச்சுவது என, திட்டப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன.

50,000 மரக்கன்றுகள் நடவு

இதுகுறித்து வனத்துறை அதிகாரி கூறியதாவது:காலநிலை மாற்றத்தை கருதியே அலையாத்தி காடுகளை வளர்ப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எங்கெங்கு இவை அழிந்து வருகிறது என்பதை கண்காணித்து, புதிய காடுகளை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். அலையாத்தி செடிகளுடன், இப்பகுதியில் மண்ணின் தன்மைக்கு ஏற்ப வளரும் மரங்களை தேர்வு செய்து நட்டு பராமரித்து வருகிறோம். இதுவரை, 50,000 மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.



பொன்னேரி, ஜன. 17-

மீஞ்சூர் கடற்கரை அருகே அமைந்துள்ள உவர்ப்பு மண் பகுதிகளில், சதுப்பு நில காடுகளை உருவாக்குவதற்காக, 500 ஏக்கர் பரப்பில், 3.50 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியில் வனத்துறை தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. கடலுக்கு அருகே, கழிமுக பகுதிகளில் உள்ள அலையாத்தி காடுகள் சுனாமி, சூறாவளி போன்ற பேரிடர் காலங்களில் மக்களுக்கு பாதுகாப்பு அரணாக செயல்படுகிறது.








      Dinamalar
      Follow us