/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குளத்தில் குளிக்க சென்ற வடமாநில தொழிலாளி பலி
/
குளத்தில் குளிக்க சென்ற வடமாநில தொழிலாளி பலி
ADDED : அக் 15, 2024 08:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மப்பேடு:பீஹார் மாநிலம் ரகுநாதபூர் பகுதியைச் சேர்ந்தவர் பினோத்ஹார், 45.
இவர் தன் குடும்பத்திருடன் தொடுகாடு பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்திம் காலை தொடுகாடு பொன்னியம்மன் கோவில் குளத்தில் குளிக்க சென்றவர் பின் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இரவு 7:00 மணியளவில் பொன்னியம்மன் கோவில் குளத்தில் இவரது உடல் மிதப்பதாக தகவல் வந்தது.
இதையடுத்து மப்பேடு போலீசார் உடலைக் கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.