sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கோ வில்களில் பொது விருந்து

/

கோ வில்களில் பொது விருந்து

கோ வில்களில் பொது விருந்து

கோ வில்களில் பொது விருந்து


ADDED : பிப் 03, 2024 11:34 PM

Google News

ADDED : பிப் 03, 2024 11:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், ஆண்டுதோறும் சுதந்திர தினம் மற்றும் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவு நாளில் பொது விருந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, அண்ணாதுரை நினைவு நாளான நேற்று சென்னை மற்றும் புறநகரில், ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 33 கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடந்தது.

மயிலாப்பூர் மாதவப்பெருமாள் கோவிலில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி, திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் வேளாண்மை துறை அமைச்சர் பன்னீர்செல்வம், பாம்பன் சுவாமி கோவிலில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்றனர்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சைதாப்பேட்டை, காரணீஸ்வரர் கோவிலில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர்.

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, அறநிலையத்துறை கமிஷனர் முரளீதரன், எம்.பி., ஏ.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரும் பல்வேறு கோவிலில் நடந்த பொது விருந்தில் பங்கேற்றனர்.

திருத்தணி முருகன் கோவிலில் நேற்று மதியம் 2,000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு பொதுவிருந்து அன்னதானம் வழங்கப்பட்டது. திருத்தணி தி.மு.க.,- எம்.எல்.ஏ., சந்திரன் வருவாய் கோட்டாட்சியர் தீபா, முருகன் கோவில் இணை ஆணையர் ரமணி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us