/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பஸ்சில் இருந்து தவறி விழுந்த மாணவன் படுகாயம்
/
பஸ்சில் இருந்து தவறி விழுந்த மாணவன் படுகாயம்
ADDED : அக் 26, 2024 07:57 PM
திருத்தணி:திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை பகுதி சேர்ந்தவர் சபாபதி மகன் நவீன்,19. இவர் பூந்தமல்லியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வருகிறார்.
பூந்தமல்லி பேருந்து நிறுத்தத்தில் இருந்து அரசு பேருந்து தடம் எண்: 201 பேருந்தில் திருத்தணி பைபாஸ் பேருந்து நிறுத்ததிற்கு வந்து இறங்கினார்.
பின், பொதட்டூர்பேட்டைக்கு செல்வதற்காக கமலா தியேட்டர் அருகே நின்றிருந்தார். அப்போது, வந்த அரசு பேருந்து, டி42 என்ற பேருந்தில் முன்படியில் நவீன் ஏறிய போது கால்தவறி கிழே விழுந்தார்.
இதில் பேருந்தின் பின்சக்கரம், நவீன் வலது காலின் மீது ஏறி இறங்கியது.
படுகாயமடைந்த மாணவனை அங்கிருந்தவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்து மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.