sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தம்பதியிடையே சமையல் தகராறு பெண் காவலர் துாக்கிட்டு தற்கொலை

/

தம்பதியிடையே சமையல் தகராறு பெண் காவலர் துாக்கிட்டு தற்கொலை

தம்பதியிடையே சமையல் தகராறு பெண் காவலர் துாக்கிட்டு தற்கொலை

தம்பதியிடையே சமையல் தகராறு பெண் காவலர் துாக்கிட்டு தற்கொலை


ADDED : ஜன 01, 2024 06:26 AM

Google News

ADDED : ஜன 01, 2024 06:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவில் முதல்நிலை காவலராக பணிபுரிந்து வருபவர் ராஜ்குமார், 34. இவரது மனைவி ரோஜா, 32. திருவள்ளூர் மகளிர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார்.

தம்பதி 2015ல் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 8, 6 வயதில் மகன், மகள் உள்ளனர். திருவள்ளூர் காவலர் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு பணி முடித்து வீட்டுக்கு வந்த ராஜ்குமார் சமையல் செய்து தர வேண்டும் என மனைவியிடம் கேட்டுள்ளார்.

'இப்பொழுது சமைக்க நேரமில்லை, காலையில் வேலைக்கு செல்ல வேண்டும். ஹோட்டலில் உணவு வாங்கி சாப்பிட்டு, குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டியது தானே' என மனைவி கூறியுள்ளார். இதில் இருவருக்குமிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

ரோஜா திடீரென்று படுக்கையறைக்கு சென்று கதவை பூட்டி கொண்டுள்ளார். 10 நிமிடங்கள் கழித்து ராஜ்குமார் கதவை திறக்க முயன்றார்.

எவ்வித சத்தமும் இல்லாததால் அக்கம் பக்கத்தில் உள்ளவர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, ரோஜா மின்விசிறியில் துாக்கில் தொங்கியுள்ளார்.

ராஜ்குமார், அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த பின், ரோஜா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, ரோஜாவின் தந்தை கணேசன் அளித்த புகாரின்படி, திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us