/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மூதாட்டியிடம் 4 சவரன் நகை 'அபேஸ்'
/
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மூதாட்டியிடம் 4 சவரன் நகை 'அபேஸ்'
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மூதாட்டியிடம் 4 சவரன் நகை 'அபேஸ்'
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மூதாட்டியிடம் 4 சவரன் நகை 'அபேஸ்'
ADDED : ஜன 22, 2025 01:31 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், கம்மார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜீகாந்தம், 69; இவரது கணவர் பி.சின்னப்பர். இவர்களுக்கு, ஒரு மகன், மூன்று மகள்கள் உள்ளனர்.
மூதாட்டிக்கு இடது கையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, திருவள்ளூர் இந்திரா நகரில் உள்ள மகன் சந்திரசேகர் வீட்டில் தங்கி, தினமும் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
எலக்ட்ரிக் ஷாக் மற்றும் பிசியோதெரபி ஆகிய சிகிச்சையை சில நாட்களாக சென்று பெற்று வருகிறார். இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல, 11.30 மணி அளவில் மருத்துவமனைக்கு சென்ற மூதாட்டி சிகிச்சை பெற்று, 1.30 மணி அளவில் மருத்துவமனையை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தார்.
அப்போது முதல் மாடியில் வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த 30 வயது இளைஞர் மருத்துவர் உங்களை அழைப்பதாக கூறியுள்ளார். ஆதார் கார்டு இணைக்க வேண்டும் எனக் கூறி, மூதாட்டி கையில் வைத்திருந்த ரசீதை வாங்கி அதில் கைநாட்டு பெற்றுள்ளார்.
இதையடுத்து ஸ்கேன் எடுக்க வேண்டும் எனக் கூறி நகையை கழட்டி பையில் வைத்துக் கொள்ளூம்படி கூறியுள்ளார். மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த நான்கு சவரன் செயினை கழற்றி பையில் போட்ட போது, அதை வாங்கி கையில் வைத்துக் கொண்ட அந்த இளைஞர், மூதாட்டியை ஸ்கேன் செய்யும் அறைக்கு செல்லுமாறு கூறிவிட்டு அங்கிருந்து மாயமானார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி கூச்சலிட்டும் யாரும் வராததால் அந்த இளைஞர் தப்பியோடினார்.
இதையடுத்து அந்த மூதாட்டி மருத்துவமனை கேட் அருகே உள்ள காவலரிடம் சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் நகர போலீசார் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
நாள்தோறும் ஆயிரக்கணக்கில் நோயாளிகள் வந்து செல்லக்கூடிய இடத்தில் போதிய காவலாளிகள், காவலர்கள் என, அதிக அளவில் இல்லாததால், இது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருவதாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.