/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
9 ஆண்டாக 'தண்ணி' காட்டிய தலைமறைவு குற்றவாளி கைது
/
9 ஆண்டாக 'தண்ணி' காட்டிய தலைமறைவு குற்றவாளி கைது
ADDED : மே 31, 2025 03:02 AM

சோழவரம்:செங்குன்றம், சோலை நகரைச் சேர்ந்தவர் சுபாஷ், 32. இவர், கடந்த 2013ல் சோழவரம், காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த முத்துபிரகாஷ், 35, என்பவரை முன்விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்தார்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக, சுபாஷ் கைது செய்யப்பட்டார். பொன்னேரி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. கடந்த 2016ல் பிணையில் வந்த சுபாஷ், நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார்.
இதையடுத்து, அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, ஆவடி கமிஷனர் சங்கர் உத்தரவின்படி, செங்குன்றம் துணை கமிஷனர் பாலாஜி மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. சென்னை, தண்டையார்பேட்டையில் பதுங்கியிருந்த சுபாஷை நேற்று கைது செய்தனர்.