/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆகாயத்தாமரை, குப்பையால் பாழாகி வரும் பொன்னேரி குளம்
/
ஆகாயத்தாமரை, குப்பையால் பாழாகி வரும் பொன்னேரி குளம்
ஆகாயத்தாமரை, குப்பையால் பாழாகி வரும் பொன்னேரி குளம்
ஆகாயத்தாமரை, குப்பையால் பாழாகி வரும் பொன்னேரி குளம்
ADDED : டிச 08, 2024 02:30 AM

பொன்னேரி:பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட, கும்மமுனிமங்கலம் பகுதியில், குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள குளம் பராமரிப்பு இன்றி, ஆகாயத்தாமரையால் சூழ்ந்து இருக்கிறது. கரைகளை சுற்றிலும் முட்செடிகள் வளர்ந்து புதராகி உள்ளன. பல்வேறு பகுதிகளில் இருந்து கால்வாய் வழியாக கழிவுநீர் கொண்டு வந்து குளத்தில் விடப்படுகிறது.
மேலும், நகராட்சியின் குப்பை கழிவுகளும் இங்கே கொட்டப்பட்டு வருவதால் குளம் பாழாகி வருகிறது.
குளம் பராமரிப்பு இன்றி இருப்பதால், மழைக்காலங்களில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. மேற்கண்ட குளத்தை முழுமையாக துார்வாரி, சீரமைத்து, மழைநீரை தேக்கி வைப்பதன் வாயிலாக நிலத்தடி நீரை பாதுகாக்க முடியும்.
இது தொடர்பாக, நகராட்சி நிர்வாகம் எந்தவொரு நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பது, சமூக ஆர்வலர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
குடியிருப்புகளின் குப்பை மற்றும் கழிவுநீர் கொட்டுவதை தடுக்கவும், ஆகாயத்தாமரையை அகற்றி, கரைகளை சுத்தப்படுத்தி சுற்றிலும் நடைபயிற்சி செய்பவர்களுக்கு வசதியாக நடைபாதை, சிறுவர்களுக்காக பூங்கா உள்ளிட்டவையை ஏற்படுத்த தரவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.