sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

முளைப்புத்திறன் அறிந்து விதைக்க வேளாண் துறை ஆலோசனை

/

முளைப்புத்திறன் அறிந்து விதைக்க வேளாண் துறை ஆலோசனை

முளைப்புத்திறன் அறிந்து விதைக்க வேளாண் துறை ஆலோசனை

முளைப்புத்திறன் அறிந்து விதைக்க வேளாண் துறை ஆலோசனை


ADDED : நவ 24, 2024 08:26 PM

Google News

ADDED : நவ 24, 2024 08:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:விதைகளின் முளைப்புத்திறன் அறிந்து பயன்படுத்துமாறு விவசாயிகளுக்கு, வேளாண் துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்ட விதை பரிசோதனை நிலைய மூத்த வேளாண் அலுவலர் சுகுணா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

விதை பரிசோதனை என்பது விதையின் தரங்களான முளைப்புத்திறன், புறத்துாய்மை, ஈரப்பதம் மற்றும் பிறரக கலப்பு போன்றவற்றை ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைக்க செய்ய வேண்டும்.

விதை உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர், விவசாயிகள் அனைவரும் தங்களிடம் உள்ள விதையின் தரத்தை அறிந்து விதைப்பதால், அதிக மகசூல் பெற்று லாபம் அடையலாம். தரமற்ற விதைகளை பயிரிடுவதால், மகசூல் குறைந்து விவசாயிகள் நஷ்டம் அடையும் அபாயம் உள்ளது.

எனவே, விவசாயிகள் தங்களிடம் உள்ள விதைகளை, வயலில் விதைப்பதற்கு முன்பாக, எண்: 48, ஜே.என்.சாலை, ஆயில் மில் பேருந்து நிறுத்தம், திருவள்ளூர் என்ற முகவரியில் செயல்படும் விதை பரிசோதனை நிலையத்தில் அனுப்பி, முளைப்பு திறனை அறிந்து கொள்ளலாம். இந்த பரிசோதனைக்கு 80 ரூபாய் கட்டணம் செலுத்தி பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us