ADDED : அக் 21, 2025 11:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு: கனகம்மாசத்திரத்தில் மதுவிலக்கு போலீசார் நடத்திய வாகன சோதனையில், 30 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு பிரிவு போலீசார் நேற்று, கனகம்மாசத்திரம் கூட்டுச்சாலையில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த நபரை மடக்கி போலீசார் விசாரித்தனர்.
அவர், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த சிவகுமார், 54, என்பதும், கனகம்மாசத்திரம் அருகே ஆந்திர மாநில எல்லையில் உள்ள டாஸ்மாக் கடையில், 30 மதுபாட்டில்களை வாங்கியதும் தெரியவந்தது.
மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், சிவகுமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.