sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

குடி மையமாக மாறி வரும் ஏ.என்.குப்பம் அணைக்கட்டு

/

குடி மையமாக மாறி வரும் ஏ.என்.குப்பம் அணைக்கட்டு

குடி மையமாக மாறி வரும் ஏ.என்.குப்பம் அணைக்கட்டு

குடி மையமாக மாறி வரும் ஏ.என்.குப்பம் அணைக்கட்டு


ADDED : ஏப் 27, 2025 03:34 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 03:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை அருகே ஏ.என்.குப்பம் கிராமத்தில், ஆரணி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டு உள்ளது. மாலை நேரங்கள் மற்றும் விடுமுறை நாட்களில், ஏராளமான மக்கள், தங்கள் குடும்பத்துடன் அந்த அணைக்கட்டு பகுதியில் கூடுவது வழக்கம்.

சுற்றுலா தளம் போல் காட்சியளிக்கும் அந்த இடத்தில் போதிய கண்காணிப்பு இல்லாததால், சிலர் அப்பகுதியில் மது அருந்துவது, குடித்த மது பாட்டில்களை உடைப்பது, குடி போதையில் ஆற்றில் ஆபத்தாக குளிப்பது, மற்றவர்களுக்கு இடையூறாக நடந்து கொள்வது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது.

இதனால் அணைக்கட்டு பகுதியில் காணும் இடம் எல்லாம், மது பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள் பரவி கிடக்கின்றன. இதனால், அங்கு வரும் பொதுமக்கள் அச்சம் அடைவதுடன், முக சுளிப்புக்கு ஆளாகின்றனர்.

நீர் வளத்துறையினர் மற்றும் கவரைப்பேட்டை போலீசார், அணைக்கட்டு பகுதியை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us