/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சுற்றுச்சுவர் இல்லாத அங்கன்வாடி மையம்
/
சுற்றுச்சுவர் இல்லாத அங்கன்வாடி மையம்
ADDED : அக் 18, 2024 02:48 AM

பூண்டி:பூண்டி ஒன்றியம் பட்டரைப்பெரும்புதூர் ஊராட்சிக்கு உட்பட்டது வரதாபுரம் கிராமம். இங்கு கங்கையம்மன் கோவில் அருகே அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
இந்த அங்கன்வாடி மையம் கோவில் குளம் ஒட்டி அமைந்துள்ளதால் குழந்தைகள் விளையாடும் போது குளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதி பெற்றோர் குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்ப அச்சப்படுகின்றனர்.
இதுகுறித்து பி.டி.ஓ., அலுவலக அதிகாரிகளிடம் தெரிவித்தும் சுற்றுச்சுவர் அமைக்க இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
எனவே குழந்தைகளின் பாதுகாப்பை கருதி அங்கன்வாடி மையத்தை சுற்றி சுவர் அமைக்க மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.