/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கட்டடம் இல்லாமல் அங்கன்வாடி குழந்தைகள் அவதி
/
கட்டடம் இல்லாமல் அங்கன்வாடி குழந்தைகள் அவதி
ADDED : பிப் 22, 2024 11:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடுதிருவாலங்காடு ஒன்றியம் பெரியகளக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்டது ஜே .எஸ். ராமாபுரம் கிராமம்.
இங்கு அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில் அமைந்திருந்த அங்கன்வாடி மையத்தில், 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வந்தனர்.
இந்நிலையில், கடந்தாண்டு அங்கன்வாடி மையம் பழுதடைந்த காரணத்தால் இடிக்கப்பட்டது. இதனால் அங்கன்வாடி மையம் தற்காலிகமாக தனியார் இடத்தில் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது.
இங்கு இட நெருக்கடியால் குழந்தைகள் சிரமப்படுகின்றனர்.
எனவே அங்கன்வாடி மையம் அகற்றப்பட்ட இடத்தில் புதிதாக கட்டடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.