sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சிவன் கோவில்களில் அன்னாபிேஷகம்

/

சிவன் கோவில்களில் அன்னாபிேஷகம்

சிவன் கோவில்களில் அன்னாபிேஷகம்

சிவன் கோவில்களில் அன்னாபிேஷகம்


ADDED : நவ 16, 2024 01:55 AM

Google News

ADDED : நவ 16, 2024 01:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி அடுத்த நாபளூர் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் சமேத காமாட்சி அம்மன் கோவிலில் நேற்று ஐப்பசி மாத பவுர்ணமி ஒட்டி, காலையில் மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.

தொடர்ந்து இரவு, 7:00 மணிக்கு, 200 கிலோ பச்சரிசி சமையல் மூலவருக்கு அன்னாபிேஷகம் மற்றும் பல்வேறு காய்கறி, பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. அன்னபிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

திருத்தணி அடுத்த தாடூர் கடலீஸ்வரர் கோவிலில் மூலவருக்கு காலையில் சிறப்பு அபிேஷகம் நடந்தது. மதியம், ஒரு மூட்டை அரிசியால் சாதம் தயாரித்து மூலவருக்கு அன்னாபிேஷகம் நடத்தி வழிப்பட்டனர்.

திருத்தணி நந்தி ஆற்றங்கரையோரம் உள்ள வீரட்டீஸ்வரர், திருக்குளம் சரவண பொய்கை அருகே உள்ள சிவன் கோவில், பழைய திரவுபதி அம்மன் கோவில் தெருவில் உள்ள சதாசிவலிங்கேஸ்வரர், மத்துார், அகூர் மற்றும் அருங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள அகத்தீஸ்வரர் கோவில்களிலும் அன்னாபிேஷகம் நடந்தது.






      Dinamalar
      Follow us