/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
/
கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ADDED : ஆக 07, 2025 02:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த அரும்பாக்கம் கிராமத்தில் வசித்தவர் முருகன், 26. அங்குள்ள ஏரிக்கரை பகுதியில், கடந்த மாதம், 31ம் தேதி, மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
ஆரம்பாக்கம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், 11 பேர் கொண்ட கும்பல், கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. அதில், ஏற்கனவே ஒன்பது பேர் போலீசார் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், நேற்று பொன்னேரியை சேர்ந்த லவன்குமார், 36, என்பவரை போலீசார் கைது செய்தனர். இதுவரை, மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.