/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நிலம் அளக்க இணையத்தில் விண்ணப்பிக்கலாம்
/
நிலம் அளக்க இணையத்தில் விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜன 30, 2024 01:40 AM
திருவள்ளூர் : நில அளவை செய்ய, இணையத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு, கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இப்புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் நிலஅளவை செய்ய எந்த நேரத்திலும், எந்த இடத்திலிருந்தும் நில அளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணத்தை, இணையவழியிலேயே செலுத்தலாம்.
நிலஅளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு, எஸ்.எம்.எஸ்., அல்லது மொபைல் போனில் தெரிவிக்கப்படும்.
மேலும், நில அளவை செய்யப்பட்ட பின் மனுதாரர் மற்றும் நில அளவர் கையொப்பமிட்ட அறிக்கை, வரைபடம் ஆகியவற்றை மனுதாரர், https://eservices.tn.gov.in/என்ற இணையம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனைவரும் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.