sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வரைபடமாக மாறிய அரக்கோணம் நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள், பகுதிவாசிகள் கடும் அவதி

/

வரைபடமாக மாறிய அரக்கோணம் நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள், பகுதிவாசிகள் கடும் அவதி

வரைபடமாக மாறிய அரக்கோணம் நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள், பகுதிவாசிகள் கடும் அவதி

வரைபடமாக மாறிய அரக்கோணம் நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள், பகுதிவாசிகள் கடும் அவதி


ADDED : ஜன 02, 2025 01:34 AM

Google News

ADDED : ஜன 02, 2025 01:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது உளுந்தை ஊராட்சி. இப்பகுதியில் உள்ள தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் தினமும், 25,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த நெடுஞ்சாலையில், தண்டலம் முதல், காட்டு கூட்டு சாலை வரை நெடுஞ்சாலை பல பகுதியில் சேதமடைந்து மோசமாக உள்ளது.

குறிப்பாக, ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்துக்குட்பட்ட மண்ணுார், வளர்புரம் பகுதியில் நெடுஞ்சாலை சேதமடைந்து பல இடங்களில் வரைபடம் போல் மாறியுள்ளது. இதனால் வாகன ஒட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் சில நேரங்களில் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.

மோசமான நெடுஞ்சாலையால், இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையை ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us