sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

3 கிலோ கஞ்சா பறிமுதல் அசாம் வாலிபர்கள் கைது

/

3 கிலோ கஞ்சா பறிமுதல் அசாம் வாலிபர்கள் கைது

3 கிலோ கஞ்சா பறிமுதல் அசாம் வாலிபர்கள் கைது

3 கிலோ கஞ்சா பறிமுதல் அசாம் வாலிபர்கள் கைது


ADDED : அக் 06, 2025 02:18 AM

Google News

ADDED : அக் 06, 2025 02:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் ரயில் நிலையத்தில், 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர்கள் இருவரை கைது செய்தனர்.

திருவள்ளூர் ரயில் நிலையம் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக, ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று மதியம், திருவள்ளூர் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்த இருவரிடம், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஷாஆலோம், 31, மற்றும் மாபிகில்ஹேக், 30, என, தெரிய வந்தது. அவர்கள் வைத்திருந்த சாக்கு பையில் இருந்த 3 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

இருவரையும் திருவள்ளூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து, வழக்கு பதிந்த மதுவிலக்கு போலீசார் விசாரிக்கின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு 30,000 என, தெரியவந்தது.






      Dinamalar
      Follow us