/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் வரும் 19ல் பறிமுதல் வாகனங்கள் ஏலம்
/
திருவள்ளூரில் வரும் 19ல் பறிமுதல் வாகனங்கள் ஏலம்
ADDED : டிச 07, 2024 08:54 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டு, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், வரும் 19ம் தேதி, ஏலம் விடப்பட உள்ளது.
திருவள்ளூர் மாவட்ட காவல்துறை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் சம்மந்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட, 99 வாகனங்களை ஏலம் விட, எஸ்.பி., ஆர்.சீனிவாசபெருமாள் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, 81 இருசக்கர வாகனங்கள், 3 மூன்றுசக்கர வாகனங்கள், 15 நான்குசக்கர வாகனங்கள் என, மொத்தம் 99 வாகனங்கள், டிச. 19ம் தேதி, காலை 10:00 மணியளவில், திருவள்ளூர் மாவட்ட ஆயுதப்படை மைதானம் அருகே, ஏலம் விடப்பட உள்ளது.
வாகனங்களை ஏலம் கேட்க வருவோர், முன் வைப்பு கட்டணத் தொகையாக இருசக்கர வாகனங்களுக்கு 1,000 ரூபாய், மூன்று மற்றும் நான்குசக்கர வாகனத்திற்கு, 5,000 ரூபாய், செலுத்தி டோக்கன் பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஏலம் எடுத்தவர்கள் ஏலம் கேட்ட தொகையுடன் இருசக்கர வாகனத்திற்க்கு அரசு விற்பனை வரி 12 சதவீதம், மூன்று மற்றும் நான்குசக்கர வாகனத்திற்கு, 18 சதவீதம் உடனடியாக செலுத்த வேண்டும்.
வாகனத்தின் விபரம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பீட்டு தொகை, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக தகவல் அறிவிப்பு பலகையில் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது.
பறிமுதல் வாகனத்தின் உரிமையாளர்கள் அதற்கான பதிவுச்சான்று, ஆதார் கார்டு கொண்டு வர வேண்டும். பொது ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் ஆதார் கார்டு அல்லது அரசால் அங்கீகரிக்கபப்ட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை தவறாமல் கொண்டு வர வேண்டும்.
ஏலத்தில் பங்கேற்று, வாகனம் எடுக்காதவர்களுக்கு முன் வைப்பு கட்டண தொகை, ஏலத்தின் முடிவில் திருப்பித் தரப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.