/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
முருகன் கோவிலில் ஆவணி கிருத்திகை
/
முருகன் கோவிலில் ஆவணி கிருத்திகை
ADDED : செப் 12, 2025 10:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த அத்திமாஞ்சேரிபேட்டை நெல்லிக்குன்றம் மலை மீது வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமி அருள்பாலிக்கிறார்.
நேற்று ஆவணி மாத கிருத்திகையை ஒட்டி, காலை 8:00 மணிக்கு உத்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.
வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணியர், மயில் மீது வலம் வரும் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
மாலை 6:00 மணிக்கு உத்சவர் முருகப்பெருமான், மலைக்கோவிலில் வீதியுலா வந்தார்.
அதேபோல், நெடியம் கஜகிரி செங்கல்வராய சுவாமி மலைக்கோவிலிலும், நேற்று கிருத்திகை உத்சவம் கோலாகலமாக நடந்தது.