ADDED : பிப் 03, 2024 11:23 PM

அ நிறம் | அளவு
பொன்னேரி: மீஞ்சூர், சோழவரம் வட்டாரங்களில், 42 ஏக்கர் பரப்பில், சம்பா பருவத்திற்கு நெல் பயிரிடப்பட்டு தற்போது அறுவடை பணிகள் நடைபெறுகிறது.
அறுவடை முடிந்து, விளைநிலங்களில் சிதறிக் கிடக்கும் வைக்கோல், ரோலர் இயந்திரம் உதவியுடன் சுருட்டி உருளை வடிவில் கட்டப்படுகிறது. ரோலர் இயந்திரத்தின் உதவியால் வைக்கோல் வீணாவது தவிர்க்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
