sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கலை நிகழ்ச்சி வாயிலாக திருத்தணியில் விழிப்புணர்வு

/

கலை நிகழ்ச்சி வாயிலாக திருத்தணியில் விழிப்புணர்வு

கலை நிகழ்ச்சி வாயிலாக திருத்தணியில் விழிப்புணர்வு

கலை நிகழ்ச்சி வாயிலாக திருத்தணியில் விழிப்புணர்வு


ADDED : பிப் 04, 2025 01:03 AM

Google News

ADDED : பிப் 04, 2025 01:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி, திருத்தணி நகராட்சியில், திடக்கழிவு மேலாண்மை பணி, மட்கும் குப்பை, மட்காத குப்பை, பிளாஸ்டிக், புகையிலை விற்பனைக்கு தடை, டெங்கு காய்ச்சல், மீண்டும் மஞ்சப்பை, மழைநீர் சேகரிப்பு, சொத்து வரி செலுத்துதல் தொடர்பான மக்கள் இடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதில், சிவசக்தி கிராமிய கலைக் குழுவின் சார்பில், திருத்தணி பேருந்து நிலையம், கமலா திரையரங்கு, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, காந்தி நகர் திரவுபதியம்மன் கோவில் மற்றும் அரசு மருத்துவமனை வளாகம் ஆகிய இடங்களில், கலை நிகழ்ச்சிகள் வாயிலாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

முன்னதாக, கலை நிகழ்ச்சியை நகராட்சி தலைவர் சரஸ்வதி, கமிஷனர் பாலசுப்ரமணியம், துப்புரவு ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

கலை நிகழ்ச்சியில், குப்பையை பிரித்து கொடுப்பது, அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர், குட்கா பொருட்களை பயன்படுவது தவிர்த்தல் போன்றவை குறித்து, விழிப்புணர்வு நாடக கலைஞர்கள் நடித்து காண்பித்தனர்.

இந்த மாதம் முழுதும் மேற்கண்டவை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us