sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஆரணி ஆற்றில் ரூ.8.50 கோடியில் கரை சீரமைப்பு பணி துவக்கம்

/

ஆரணி ஆற்றில் ரூ.8.50 கோடியில் கரை சீரமைப்பு பணி துவக்கம்

ஆரணி ஆற்றில் ரூ.8.50 கோடியில் கரை சீரமைப்பு பணி துவக்கம்

ஆரணி ஆற்றில் ரூ.8.50 கோடியில் கரை சீரமைப்பு பணி துவக்கம்


ADDED : ஜூலை 16, 2025 01:53 AM

Google News

ADDED : ஜூலை 16, 2025 01:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி:வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆரணி ஆற்றின் கரைகளை, 8.50 கோடி ரூபாயில் சீரமைக்கும் பணிகள் துவங்கப்பட்டன.

பொன்னேரி லட்சுமிபுரம் பகுதியில் இருந்து, ஆண்டார்மடம் வரை ஆரணி ஆற்றின் கரைகளை பலப்படுத்தும் பணி ஆண்டுதோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தற்போது, வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நீர்வளத்துறை சார்பில், ஆற்றின் கரைகளை சீரமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கு தமிழக அரசு, 8.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.

நேற்று அதற்கான பணிகள் துவங்கப்பட்டன. சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நாசர், கலெக்டர் பிரதாப் ஆகியோர் பணிகளை துவக்கி வைத்தனர்.

ஆற்று கரை சீரமைப்பு பணிகளை துவக்கி வைத்து பார்வையிடுவதற்காக, அமைச்சர் நாசர் ஆற்றுப்படுகையில் சிறிது துாரம் நடந்து சென்றார். அப்போது, அங்கிருந்த பள்ளத்தை தாண்டும்போது கால் இடறி விழப்போனார். பின்னால் வந்த கலெக்டர் அவரை பிடித்து, பாதுகாத்தார்.






      Dinamalar
      Follow us