sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருவள்ளூரில் போகிப்பண்டிகை கோலாகலம்

/

திருவள்ளூரில் போகிப்பண்டிகை கோலாகலம்

திருவள்ளூரில் போகிப்பண்டிகை கோலாகலம்

திருவள்ளூரில் போகிப்பண்டிகை கோலாகலம்


ADDED : ஜன 13, 2025 11:57 PM

Google News

ADDED : ஜன 13, 2025 11:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடம்பத்துார், மார்கழியின் கடைசி நாளில் கொண்டாடப்படும் போகி பண்டிகை பழையன கழிதலும் புதியன புகுதலுமே போகி பண்டிகையின் முக்கிய கருத்து.

பொங்கல் பண்டிகைக்கு முன் கொண்டாடப்படும் போகிப்பண்டிகை, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் சிறப்பிக்கப்படும்.

உழவுக்கு வழிவகை செய்த கதிரவனுக்கும், அதற்கு உறுதுணையாக இருக்கும் பசுவுக்கும் நன்றி சொல்லும் விதமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் போகிப்பண்டிகையை சிறுவர்கள் உற்சாகமாக கொண்டாடி வந்தனர்.

வீட்டில் இருக்கும் பழைய பொருட்கள், தேவை இல்லாத பொருட்களை புறக்கணித்து, அதை தீயிலிட்டு கொளுத்துவது போகியின் முக்கிய விஷயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

இந்த போகி பண்டிகையானது நேற்று, திருவள்ளூர் மாவட்டம் முழுதும் சாரல் மழை பெய்தாலும் கடம்பத்துார், மணவாளநர், புட்லுார், ஈக்காடு, ஊத்துக்கோட்டை, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி திருத்தணி ஆகிய பகுதிகளில் அதிகாலை 3:00 மணி முதல் இருட்டோடு எழுந்து தங்களுடைய வீட்டில் உள்ள பழைய பொருட்கள் மற்றும் பயன்பாடாற்ற பொருட்கள் ஆகியவற்றை தீவைத்து கொளுத்தி அதைச் சுற்றிலும் அமர்ந்து கொண்டு சிறுவர்கள் பெற்றோர் என ஒன்றிணைந்து மேள தாளங்கள் முழங்க போகிப் பண்டிகை கொண்டாடினர்.

திருத்தணி நகரம் மற்றும் ஒன்றியத்தில், நேற்று, போகி பண்டிகை என்பதால் அதிகாலை, 3:00 மணி அளவில் வீடுகள் முன் பனை ஓலைகள், மற்றும் வீடுகளில் உள்ள பழைய பொருட்களை போட்டு தீயிட்டு கொளுத்தி 'போகியோ போகி' என, கொண்டாடினர்.

கட்டுப்படுத்திய மழை

திருவள்ளூர் மாவட்டத்தில், பொதுமக்கள் வீட்டில் அப்புறப்படுத்திய பழைய பொருட்களை தீ வைத்து கொளுத்தி, போகி பண்டிகையாக நேற்று அதிகாலை கொண்டாடினர்.இதற்காக, அதிகாலை 3:00 மணியில் இருந்து பொதுமக்களும், சிறுவர்களும் ஆர்வமாக மேளம் அடித்து, பழைய பொருட்களை தீ வைத்து கொளுத்தினர்.இந்த நிலையில், நேற்று, அதிகாலை 5:00 மணியில் இருந்து மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் போகிக்கு கொளுத்திய பொருட்கள் அனைத்தும் மழையில் நனைந்ததால், மாசு குறைந்ததாக, சுற்றுச்சூழல் துறையினர் தெரிவித்தனர்.ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், வெங்கல் மற்றும் சுற்றியுள்ள இடங்களில் மழை பெய்ததால், எரிப்பதற்கு சேகரித்து வைத்திருந்த பொருட்கள் ஈரமாகின. மாலை 4:00 மணிக்கு மேல் மழை நின்றதால், பொதுமக்கள் பொங்கல் பண்டிகைக்கு தேவையான, வாழை இலை, மஞ்சள், கரும்பு உள்ளிட்ட பொருட்களை வாங்கிச் சென்றனர்.








      Dinamalar
      Follow us