/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பைக்குகள் மோதல்: முதியவர் படுகாயம்
/
பைக்குகள் மோதல்: முதியவர் படுகாயம்
ADDED : ஆக 04, 2025 11:19 PM
திருவள்ளூர், திருவள்ளூர் அருகே, இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில், முதியவர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருவள்ளூர் அடுத்த பட்டரைபெரும்புதுார் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிகேசவன், 60. இவர் நேற்று முன்தினம் காலை, தன் டி.வி.எஸ்., - எக்ஸ்.எல்., இரு சக்கர வாகனத்தில், நாராயணபுரம் சென்று, வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
நாராயணபுரம் ஜங்ஷன் பகுதியில் வந்தபோது, பின்னால் வந்த 'ராயல் என்பீல்டு' இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயமடைந்த ஆதிகேசவன், திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து அவரது மனைவி சுலோச்சனா கொடுத்த புகாரின்படி திருவள்ளூர் தாலுகா ே பாலீசார் வழக்கு பதிந்து, இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.