/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நள்ளிரவில் தீயிட்டு எரிக்கப்பட்ட பைக்
/
நள்ளிரவில் தீயிட்டு எரிக்கப்பட்ட பைக்
ADDED : ஜூன் 19, 2025 01:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி அருகே, புதுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயன் மனைவி அமுலு, 34; தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு, வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த அவரது பைக்கை, மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்தியுள்ளனர். இதில், பைக் முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.