நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி : திருத்தணி முஸ்லிம் நகரைச் சேர்ந்தவர் காதர், 30. இவர், 'ஸ்பிளண்டர் பிளஸ்' இருசக்கர வாகனத்தில், திருத்தணி அக்கைய்யாநாயுடு சாலையில் உள்ள மசூதிக்கு வந்தார்.
வாகனத்தை மசூதி முன் நிறுத்திவிட்டு, பள்ளிவாசலுக்கு சென்று தொழுகை நடத்திவிட்டு வெளியே வந்தபோது, மர்ம நபர்கள், இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.
காதர் அளித்த புகாரையடுத்து, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.