ADDED : ஜூலை 13, 2025 10:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மணவாளநகர்:மணவாளநகர் பகுதியில் பைக் திருடியவரை, போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் உள்ள குமரன் நகரைச் சேர்ந்தவர் வெற்றிசெல்வன், 22. தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த 11ம் தேதி இரவு வேலைக்கு சென்றுவிட்டு, 'டியோ' பைக்கில் வீடு திரும்பினார்.
பின், வீட்டின் அருகே பைக்கை நிறுத்திவிட்டு சென்றார். காலை வந்து பார்த்த போது, பைக் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து, வெற்றிச்செல்வன் அளித்த புகாரின்படி, மணவாளநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.
விசாரணையில், அர்ஜூன் என்ற ராகுல், 20, என்பவரை கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.