ADDED : ஜூன் 04, 2025 10:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் மணவூர் அருகே ராஜபத்மாபுரம் கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள விவசாய நிலம் அருகே, 40 வயது மதிக்கத்தக்க பெண் உயிரிழந்து கிடப்பதாக திருவாலங்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, போலீசார் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்தவர் யார்? கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.