/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
படகில் இருந்து தவறி விழுந்தவர் இரு நாளுக்கு பின் சடலமாக மீட்பு
/
படகில் இருந்து தவறி விழுந்தவர் இரு நாளுக்கு பின் சடலமாக மீட்பு
படகில் இருந்து தவறி விழுந்தவர் இரு நாளுக்கு பின் சடலமாக மீட்பு
படகில் இருந்து தவறி விழுந்தவர் இரு நாளுக்கு பின் சடலமாக மீட்பு
ADDED : நவ 05, 2025 01:33 AM

ஊத்துக்கோட்டை: பூண்டி நீர்த்தேக்கத்தில் படகில் சென்று மீன்பிடித்த போது, படகு கவிழ்ந்த விபத்தில், இரண்டு நாட்களுக்குப் பின் வாலிபர் சடலமாக மீட்கப்பட்டார்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த யாசின், 22, சுபான், 23, சமீர் அகமது, 19, மோவூர் கிராமத்தைச் சேர்ந்த ராகேஷ், 22, ஆகியோர், கடந்த 2ம் தேதி மாலை, பூண்டி நீர்த்தேக்கத்திற்கு சென்றனர்.
யாசின், ராகேஷ் ஒரு படகிலும், சுபான், சமீர் அகமது ஒரு படகிலும் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, படகு கவிழ்ந்ததில் யாசின் நீரில் மூழ்கினார். ராகேஷ் நீச்சல் அடித்து கரை சேர்ந்தார். இதுகுறித்து, திருவள்ளூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இரண்டு நாட்களாக தேடி வந்த நிலையில், நேற்று யாசின் சடலமாக மீட்கப்பட்டார். பென்னலுார்பேட்டை போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

