/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தண்டவாளத்தில் வாலிபர் சடலம் மீட்பு
/
தண்டவாளத்தில் வாலிபர் சடலம் மீட்பு
ADDED : ஜன 17, 2025 10:00 PM
கடம்பத்துார்:சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில், திருவள்ளூர் - ஏகாட்டூர் இடையே, தண்டவாளத்தில் ஒருவர் தலை துண்டாகி பலியாகி கிடப்பதாக, நேற்று முன்தினம் திருவள்ளூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
வழக்கு பதிந்த திருவள்ளூர் ரயில்வே போலீசார், உடலைக் கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரித்து வருகின்றனர்.
விசாரணையில் இறந்து கிடந்த நபருக்கு 40 வயதுடையவர், 160 செ.மீ., உயரம், வெள்ளை நிறத்தில் நடுத்தர உடல்வாகு உடையவர், வலதுபக்க இடுப்பு மற்றும் இடது பக்க கண்ணுக்கு கீழ் கருப்பு மச்சம் இருப்பதாக, போலீசார் தெரிவித்தனர்.
மேலும் காக்கி நிற டி - சர்ட்டும், சந்தன நிற பேண்டும் அணிந்திருந்த அவர் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.