sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வீரராகவர் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்

/

வீரராகவர் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்

வீரராகவர் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்

வீரராகவர் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்


ADDED : ஜன 25, 2025 01:41 AM

Google News

ADDED : ஜன 25, 2025 01:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், தை பிரம்மோற்சவம் நேற்று, கொடியேற்றத்துடன் துவங்கியது.

நுாற்றி எட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான, திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் ஆண்டுக்கு இரு பிரம்மோற்சவங்கள் நடைபெறுகிறது. சாலிஹோத்ர மகரிஷிக்கு வீரராகவர் காட்சி அளித்த தினம் என்பதால், தை பிரம்மோற்வம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த ஆண்டிற்கான, தை பிரம்மோற்சவம், நேற்று, காலை 5:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, உற்சவர் வீரராகவர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக தங்க சப்பரத்தில் வீதியுலா வந்தார். இரவு சிம்ம வாகனம் நடந்தது.

நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான, கருடசேவை, நாளை நடக்கிறது. வரும், 29ல் தை அமாவாசை முன்னிட்டு, ரத்னாங்கி சேவை நடக்கிறது.

மறுநாள், 30ம் தேதி, தேரோட்டம் நடக்கிறது. வரும், பிப்.2 வரை தொடர்ந்து, உற்சவர் வீரராகவர் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.






      Dinamalar
      Follow us