/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவிலில் நாளை பிரம்மோத்சவம் துவக்கம்
/
பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவிலில் நாளை பிரம்மோத்சவம் துவக்கம்
பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவிலில் நாளை பிரம்மோத்சவம் துவக்கம்
பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவிலில் நாளை பிரம்மோத்சவம் துவக்கம்
ADDED : மார் 31, 2025 02:50 AM
பொன்னேரி,:பொன்னேரி ஆனந்தவல்லி அம்மை வலம்கொண்ட அகத்தீஸ்வரர் சுவாமி கோவிலில், பங்குனி பிரம்மோத்சவம் ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டிற்கான பிரம்மோத்சவம், நாளை காலை 10:00 மணிக்கு, கிராம தேவதை சிறப்பு பூஜையுடன் துவங்குகிறது.
வரும் 3ம் தேதி கொடியேற்றமும், அன்றிரவு 8:00 மணிக்கு அன்ன வாகனத்தில் வீதியுலா நடைபெறும். 4ம் தேதி காலை 7:30 மணிக்கு சூரியபிரபை, சந்திரபிரபை உத்சவமும், 9ம் தேதி காலை 9:00 மணிக்கு தேர் திருவிழாவும் நடைபெற உள்ளன.
வரும் 12ம் தேதி காலை 11:00 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு 7:30 மணிக்கு ஆனந்தபுஷ்கரணி திருக்குளத்தில் தெப்ப உத்சவமும் நடைபெறுகிறது. தினமும் இரவு 8:00 மணிக்கு சிம்ம வாகனம், பூதவாகனம், நாக வாகனம், ரிஷப வாகனம், யானை வாகன காட்சிகள் நடைபெற உள்ளன.
தினமும் காலை 7:30 மணி மற்றும் இரவு 8:00 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் வீதியுலா நடைபெறும். 16ம் தேதி வரை பிரம்மோத்சவ விழா நடைபெறுகிறது.