/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கொப்பூரில் 'பார்' ஆக மாறிய கிளை நுாலகம்
/
கொப்பூரில் 'பார்' ஆக மாறிய கிளை நுாலகம்
ADDED : நவ 03, 2025 01:07 AM

கொப்பூர்: கொப்பூரில் பராமரிப்பில்லாத கிளை நுாலம் மது அருந்தும் கூடாரமாக மாறியுள்ளது பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது கொப்பூர்.
இங்கு அரசு பள்ளி கிராம சேவை மையம் அருகே கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கிளை நுாலகத்தை பகுதிமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் பயன்படுத்தி வந்தனர்.
இந்த நுாலகம் போதிய பராமரிப்பு இல்லாதாதல் கட்டடம் மிகவும் சேமடைந்துள்ளது. இதனால் மது அருந்தும் கூடாரமாகவும் மாறி விட்டது.
மேலும் நுாலக புத்தகங்கள் கிராம சேவை மையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக பகுதி மக்கள் தெரிவித்தனர்.
தற்போது கடம்பத்துார் ஒன்றியத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கிளை நுாலகங்கள் தலா 1.40 ரூபாய் லட்சத்தில் சீரமைக்கப்பட்டு வருகிறது.
ஆனால் கொப்பூர் கிளை நுாலகத்தை சீரமைக்க அதிகாரிகள் முன்வராதது நுாலக வாசகர்கள் மற்றும் பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிளை நுாலகத்தை ஆய்வு செய்து சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென கொப்பூர் பகுதி மக்கள் மற்றும் நுாலக வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

