ADDED : டிச 04, 2025 05:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்: கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார், 37. இவர் இப்பகுதியில் உள்ள மூங்காத்தம்மன் கோவிலில் பூசாரியாக உள்ளார்.
நேற்று முன்தினம் காலை கோவிலை திறக்க வந்தார். அங்கிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த 15,000 ரூபாய் காணாமல் போனது தெரிந்தது.
சிவகுமார் அளித்த புகாரின்படி, போலீசார், மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

