sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

2 வீடுகளில் திருட்டு

/

2 வீடுகளில் திருட்டு

2 வீடுகளில் திருட்டு

2 வீடுகளில் திருட்டு


ADDED : டிச 26, 2024 09:37 PM

Google News

ADDED : டிச 26, 2024 09:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே, பென்னலுார்பேட்டை கிராமம், பஜார் தெருவில் வசித்து வருபவர் வசந்தா, 58. நேற்றுமுன்தினம் இரவு, பக்கத்தில் தெருவில் வசிக்கும் அவரது தங்கை வீட்டிற்கு சென்று தங்கினார். நேற்று காலை, தன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே புகுந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த மூன்று சவரன் நகை, 10 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.

அதே கிராமத்தில், வாணி தெருவில் வசிக்கும் சரவணன், 38, துக்க நிகழ்விற்காக உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று காலை வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த இரண்டரை சவரன், கம்மல், மூக்குத்தி மற்றும் 5,000 ரூபாய் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து பென்னலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us