sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

குப்பை கொட்டும் இடமாக மாறிய பேருந்து பணிமனை குடிநீர் கிணறு

/

குப்பை கொட்டும் இடமாக மாறிய பேருந்து பணிமனை குடிநீர் கிணறு

குப்பை கொட்டும் இடமாக மாறிய பேருந்து பணிமனை குடிநீர் கிணறு

குப்பை கொட்டும் இடமாக மாறிய பேருந்து பணிமனை குடிநீர் கிணறு


ADDED : மார் 30, 2025 01:45 AM

Google News

ADDED : மார் 30, 2025 01:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி - அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில், திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனை அமைந்துள்ளது. இப்பணிமனையில் 84 பேருந்துகளும், 300க்கும் மேற்பட்ட ஊழியர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த போக்குவரத்து பணிமனைக்கு குடிநீர் வசதிக்காக, கிணறு அமைத்து அதன் வாயிலாக தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. ஒன்றரை ஆண்டாக, தரைமட்ட கிணறு மற்றும் மின்மோட்டார் அறை முறையாக பராமரிக்காததால், நகராட்சி ஊழியர்கள் மற்றும் அருகே வசிப்போர் குப்பையை கொட்டுகின்றனர்.

மேலும், மின்மோட்டார் அறையும் சேதமடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. சில மாதங்களாக, தரைமட்ட கிணற்றில் இருந்து அரசு போக்குவரத்து பணிமனைக்கு தண்ணீர் கொண்டு செல்வதில்லை. இதனால், பணிமனையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

போதிய தண்ணீர் வசதியில்லாததால், அரசு பேருந்துகளை கழுவ முடியாத நிலை உள்ளது.

மேலும், ஓட்டுநர், நடத்துநர் மற்றும் தொழிற்நுட்ப ஊழியர்கள் தண்ணீர் பற்றாக்குறையால் தினமும் அவதிப்படுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து, பராமரிப்பின்றி கிடக்கும் குடிநீர் கிணற்றை சீரமைக்க வேண்டும். மேலும், குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us