sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 பேருந்து நிலைய நுழைவாயில் சாலை சேதம் பஸ்கள் உள்ளே வராததால் பயணியர் சிரமம்

/

 பேருந்து நிலைய நுழைவாயில் சாலை சேதம் பஸ்கள் உள்ளே வராததால் பயணியர் சிரமம்

 பேருந்து நிலைய நுழைவாயில் சாலை சேதம் பஸ்கள் உள்ளே வராததால் பயணியர் சிரமம்

 பேருந்து நிலைய நுழைவாயில் சாலை சேதம் பஸ்கள் உள்ளே வராததால் பயணியர் சிரமம்


ADDED : டிச 06, 2025 06:29 AM

Google News

ADDED : டிச 06, 2025 06:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமழிசை: திருமழிசை பேருந்து நிலைய நுழைவாயில் பள்ளங்களாக மாறியுள்ளதால், மாநகர பேருந்துகள் பேருந்து நிலையத்திற்கு வராமல் வெளியிலேயே பயணியரை இறக்கி விடுகின்றன.

திருமழிசை பேருந்து நிலையத்தில் இருந்து பிராட்வே, தி.நகர், தாம்பரம், கோயம்பேடு ஆகிய பகுதிகளுக்கு தினமும், 50க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் சென்று வருகின்றன.

மேலும், திருமழிசை வழியாக திருவள்ளூர், திருத்தணி, திருப்பதி ஆகிய பகுதிகளில் இருந்து சென்னைக்கு செல்லும் பேருந்துகள் என தினமும், 200க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் சென்று வருகின்றன.

இந்நிலையில், திருமழிசை பேருந்து நிலையத்திற்கு நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளில் சாலை மிகவும் சேதமடைந்து, குண்டும், குழியுமாக உள்ளது.

மழைக்காலங்களில் நுழைவு பகுதி குளம் போல் மாறுவதால், பேருந்து நிலையத்திற்கு வரும் பயணியர் கடும் சிரமப்படுகின்றனர். சில நேரங்களில் திருவள்ளூரிலிருந்து சென்னை செல்லும் மாநகர பேருந்துகள் நிலையத்திற்கு உள்ளே வராமல் வெளிப்புறமே பயணியரை இறக்கி விட்டு செல்கின்றன.

இதனால் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் பயணியர் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

சம்பந்தப்பட்ட பேரூராட்சி அதிகாரிகள் பேருந்து நிலைய நுழைவு மற்றும் வெளியேறும் பகுதியில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டுமென பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us