/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நிழற்குடை இல்லாத நிறுத்தம் வெள்ளவேடு பயணியர் அவதி
/
நிழற்குடை இல்லாத நிறுத்தம் வெள்ளவேடு பயணியர் அவதி
ADDED : மார் 05, 2025 02:11 AM

வெள்ளவேடு:பூந்தமல்லி ஒன்றியம் திருமழிசை அருகே வெள்ளவேடு ஊராட்சி அமைந்துள்ளது. இங்கிருந்து, சென்னை மற்றும் திருவள்ளூருக்கு பணி நிமித்தமாக பகுதிவாசிகள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவ -- மாணவியர் என, தினமும் 1,000க்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர்.
இப்பகுதியில், நெடுஞ்சாலையில் பழைய காவல் நிலையம் எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி பூந்தமல்லி, சென்னை மார்க்கமாக தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.
இங்கு, பயணியர் நிழற்குடை இல்லாததால், பேருந்துக்காக காத்திருக்கும் பகுதிவாசிகள் மற்றும் மாணவ - மாணவியர் மழையிலும், வெயிலிலும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, நெடுஞ்சாலையோரம் பயணியர் நிழற்குடை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள் மற்றும் மாணவ - மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.